இலங்கையில் கொடூரமான பகிடிவதை : காட்டிக்கொடுக்க புதிய செயலி!!

596

இலங்கையில் பகிடிவதையை கட்டுப்படுத்த புதிய செயலி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள், கல்வியியற் கல்லூரிகளில் பகிடிவதைகள் கொடூரமான, நேர்மையற்ற, மனிதாபிமானமற்ற செயற்பாடாகியுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக அதிகாரிகளினாலும் பகிடிவதையை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மேற்கொள்ளும் குழுக்கள், குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட குழுக்கள் போன்று செயற்படுவதன் காரணமாக முறைப்பாடு செய்ய மாணவர்கள் அச்சப்படுகின்றனர்.

அதற்கமைய தொலைபேசிக்கான புதிய App ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த App ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த முறையின் ஊடாக பகிடிவதையை நிறுத்த விட முடியாதென்ற போதிலும், இதனை விடவும் சிறப்பான செயற்பாடு ஒன்று செயற்படுத்தப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய App அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.