கடலுக்குள் மூழ்கிப் போகும் இலங்கையின் ஒரு பகுதி!!

491

புத்தளம் கடற்கரையோர பகுதியிலுள்ள மைதானம் ஒன்று கடலில் மூழ்கி வருவதாக தெரிய வந்துள்ளது. மஹவெவ – மடட்கொட்டுவ கோல்டன் பீச் மைதானம் வேகமாக கடல் நீரில் மறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

150 மீற்றர் தூரம் வரையிலான மைதானத்தின் பகுதி கடலுக்குள் சென்றுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் கடலுக்கு நேராக இருந்த வீதியும் முறையாக கடலுக்கு இரையாகி வர ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆபத்து தொடர்பில் கடல் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு பல மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டதாகவும், எந்த பலனும் இல்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

பருவ காலம் ஆரம்பித்துள்ளமையினால் கடல் அரிப்பின் வேகம் அதிகமாக உள்ளதென கூறப்படுகின்றது.

இந்நிலைமை காரணமாக பிரதேசத்திற்கு உள்ள ஒரே மைதானம் மற்றும் வீதி கடலுக்கு இரையாகும் ஆபத்தில் உள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.