இலங்கை மற்றும் அதனை சூழவுள்ள கடற் பிரதேசத்தில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை நீடிக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
இன்றைய தினம் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும். சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு அதிகமான அடை மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடும் காற்று காரணமாக பல பிரதேசங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குருணாகல் – குடாகல்கமுவ பிரதேசத்தில் 40 வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
நுவரெலியா, ஹட்டன் மற்றும் மாத்தறை பிரதேசங்களில் மரங்கள் விழுந்தமையினால் பல வீதிகளில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் மின்சார தூண்கள் மீது மரங்கள் உடைந்து விழுந்துள்ளமையினால் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.





