பொலிசாரை மிரள வைத்த பூனைக்குட்டி!!

849

catஇங்கிலாந்தில் அவசர பொலிஸ் அதிகாரிகளை திணற வைத்த பூனைக்குட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லண்டனின் வடக்குப்பகுதி பொலிசாருக்கு ஒரு அவசர உதவி கோரும் தொலைபேசி அழைப்பு வந்தது.

அந்த அழைப்பு சரியா என்பதை கண்டறிய முயன்ற போது எதிர்முனையில் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை. எனவே விபரீதம் நடந்து விடக்கூடாது என்பதற்காக அழைப்பு வந்த வீட்டை நோக்கி பொலிசார் விரைந்தனர்.

வெகுநேரம் ஆகியும் வீட்டிற்குள் இருந்து எவ்வித சத்தமும் வராததால் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றனர். உள்ளே யாரும் இல்லை பூனைக்குட்டி ஒன்று நடுங்கியபடி நின்று கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் வீட்டின் உரிமையாளர் ஜேம்ஸ் வந்தார்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் பூனைக்குட்டி தாவி குதிக்கையில் தொலைபேசி மீது விழுந்து அது அவசர பொலிஸ் உதவி நம்பருக்கு சென்றிருக்கலாம் என தெரியவந்தது.