ஞானசார தேரருக்கு ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி!!

523

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில் அனுபவிக்கும் வகையில் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தால் இந்த தண்டனை இன்று வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தியா எக்னெலிகொடவுக்கு 50,000 நஸ்ட ஈடும், 3000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

2016 ஜனவரி 25ம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் வைத்து திட்டி அச்சுறுத்தியமை தொடர்பில் பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த வழக்கின் தீர்ப்பிற்கு இன்று திகதி குறிக்கப்பட்டிருந்த நிலையில், ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில் அனுபவிக்கும் வகையில் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.