நிறைமாத கர்ப்பிணியை கொன்றது ஏன் : கணவனின் திடுக்கிடும் வாக்குமூலம்!!

578

தமிழகத்தில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொன்றுவிட்டு நாடகமாடிய கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தின் பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 25), ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயந்திக்கும் காதல் மலர்ந்துள்ளது, இவர்கள் நெருங்கி பழகவே, கர்ப்பமாகியுள்ளார் ஜெயந்தி. இது தெரிந்ததும் மருந்துகள் வாங்கி கொடுத்து சீனிவாசன் கர்ப்பத்தை கலைத்துள்ளார்.

இதேபோன்று கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு மீண்டும் கர்ப்பமாகியுள்ளார், இந்த முறை கர்ப்பத்தை கலைக்காமல் பெற்றோரிடம் சென்று கூறினாராம் ஜெயந்தி.

தகவல் அறிந்ததும் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர், இதனால் சீனிவாசன் கடும் கோபத்தில் இருக்க, ஜெயந்தி அவரது தாய் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 15ம் திகதி ஜெயந்தியை கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார் சீனிவாசன். சில மணிநேரங்கள் கழித்து ஜெயந்தியின் வீட்டுக்கு போன் செய்து, ஜெயந்து வந்துவிட்டாரா என கேட்டுள்ளார்.

அவரை காணாமல் பெற்றோர்கள் பதற, எதுவும் தெரியாதது போல் இவரும் தேடியுள்ளார், அத்துடன் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலும் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் பொலிசார் சீனிவாசனிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்த உண்மைகள் வெளிவந்துள்ளது.

அவர் அளித்த வாக்குமூலத்தில், ஜெயந்தியுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு கழட்டி விட எண்ணினேன். ஆனால் பெற்றோரிடம் கூறியதால் திருமணம் நடந்துவிட்டது, எப்படியாவது அவளை கொன்றுவிட எண்ணி, ரிஷிவந்தியம் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன்.

அங்கிருந்து காட்டுபகுதிக்கு கூட்டிசென்று கட்டையால் அடித்துக் கொன்றேன்.

என்னை விட்டுவிடுங்க என கெஞ்சிய போதும், அவள் கட்டியிருந்த சேலையிலேயே கழுத்தை நெறித்து கொன்றுவிட்டேன்.

என்மேல் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக தேடுவது போல் நாடகமாடினேன் என தெரிவித்துள்ளார்.