க்ரில் சிக்கன் சாப்பிடுபவரா நீங்கள் : உங்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்!!

564


ஹோட்டல்களில் சமைக்கப்படும் க்ரில் சிக்கன் எனும் மாமிச உணவை உண்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உண்டு என்ற நிலையில், அதனை சமைக்கும் போது வெளியாகும் புகையை நுகர்ந்தாலே புற்றுநோய் உண்டாகும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

க்ரில் சிக்கன் என்பது கோழி இறைச்சியை கம்பிகளில் வைத்து தீயினால் வாட்டி சமைக்கப்படும் ஒரு உணவாகும். இதனை சமைக்கும்போது பாலிசைக்கிளக் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன் எனும் வாயு வெளியாகும்.



இந்த வாயுவானது நமது சருமத்தில் ஊடுருவும் தன்மை கொண்டது. இது நமது உடலில் நுழைந்தா புற்றுநோய் தாக்கத்தை ஏற்படுத்தும். க்ரில் உணவை சமைக்கும் போது அதன் அருகில் நின்றாலே இந்த வாயு நம் உடலில் உட்புகும்.

இறைச்சியை க்ரில்லில் வைத்து சூடுபடுத்தும் போது, அதிலுள்ள கொழுப்புகள் மற்றும் சாறு எரிந்து பாலிசைக்கிளக் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பனை(PAH) உண்டாக்கும்.



இந்த நச்சுப்புகையானது, நாம் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அந்த உணவில் எளிதில் கலந்துவிடும். இந்த புகை பொதுவாக மரக்கட்டை, கரி, புகையிலை, எண்ணெய் போன்றவற்றை எரிக்கும் பொது வெளிவரும்.



இதனை சுவாசிப்பது புகையிலையை உபயோகிப்பதற்கு சமம். இந்த PAH வாயு, நேரடியாக சுவாசிக்கும் போது உட்புகுவதை விட, சருமத்தின் வழியாகவே விரைவாக ஊடுருவும் தன்மை கொண்டது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இதற்கு காரணம் சில வகை ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் தான் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தீர்வு


க்ரில் சிக்கன் சாப்பிட நினைப்பவர்கள், தங்களை முழுவதுமாக மூடி மறைக்கும் படியான உடையை அணிந்து கொண்டு க்ரில் சிக்கனை சமைக்க வேண்டும்.

சமைத்த பின்னர், அந்த உடையை நன்றாக துவைத்த பிறகே மறுமுறை பயன்படுத்த வேண்டும்.
அதிகப்படியான புகை வெளியேறுவதை சமைக்கும் போது தடுக்க வேண்டும்.

க்ரில்லில் இறைச்சியை சமைக்கும் போது மெல்லிய சாஸை ஊற்றி சமைத்தால், அதிகப்படியான PAH வெளியேறாது.

க்ரில்லில் சமைப்பதற்கு முன்பு மைக்ரோவேவ் ஓவனில் வைத்து லேசாக சமைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம், இறைச்சியில் உள்ள சாறு எரிந்து நச்சுப் புகை வெளியேறாமல் இருக்கும்.