சவுதி அரேபியா மீது ஏவுகணை தாக்குதல் : நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டது!!

586

சவுதி அரேபியாவின் ரியாத்தை நோக்கி வீசப்பட்ட ஏவுகணை வானில் இடைமறித்து அழிக்கப்பட்டது.

ஏமனில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா உதவுவதாக கூறி அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக வீசப்பட்ட ஏவுகணை சவுதி இடைமறித்து அழித்தது, ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் உதவுவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று தலைநகர் ரியாத்தை நோக்கி வீசப்பட்ட இரண்டு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது.

சத்தமான குண்டுவெடிப்புகளும், வானில் புகையும் தோன்றியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சவுதியின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பிற இலக்குகளை குறிவைத்து Burkan ஏவுகணைகள் வீசப்பட்டதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தும் ஊடகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.