சல்மன் குர்ஷித் இலங்கை வந்தடைந்தார்..!

302

salmanபொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் இன்று இலங்கை வந்தடைந்துள்ளார்.

இன்று முற்பகல் 11 மணியளவில் சல்மன் குர்ஷித் தனது குழுவினருடன் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

குர்ஷித் உள்ளிட்ட குழுவினர் நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளனர்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சல்மன் குர்ஷித் உள்ளிட்ட குழுவினர் இலங்கை வந்தடைந்துள்ளனர்.

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் நேற்று மாலை மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.