பிரான்சில் தேவாலயத்தின் மீது ஒருவர் திடீரென்று ஏறியதால், அந்த நபரை பொலிசார் மீட்டுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள Saint-Eustache தேவலாயத்தின் மீது ஏறிய நபர், அங்கு சிக்கியிருந்த காத்தாடியை எடுப்பதற்காக கூரையின் மீது ஏறியுள்ளார்.
இந்த தகவல் உடனடியாக பொலிசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதால், அப்பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து தேவலாயத்தின் மீது மேலே ஏறிய நபரை மீட்ட பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, தேவாலயத்தின் கூரையில் தன்னுடைய காத்தாடி சிக்கிக் கொண்டதாகவும், அதன் காரணமாகவே ஏறியதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இதே நபர் தான் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒருதடவை இதே தேவாலயத்தில் ஏறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





