வவுனியா குருமன்காடு சந்தி தனியார் வங்கிக்கு அருகேயுள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் இன்று (11.07.2018) அதிகாலை திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா குருமன்காட்டுச் சந்தியில் தனியார் வங்கிக்கு அருகேயுள்ள மூன்று வர்த்தக நிலையங்கள் (பலசரக்கு பொருட்கள் விற்பனை நிலையம், அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையம், தொலைத்தொடர்பகம்) இன்று காலை வர்த்தக நடவடிக்கைக்காக திறக்கப்பட்ட சமயத்தில் வர்த்தக நிலையத்தின் மேற்பகுதி (சீட்) கழற்றப்பட்டு கழவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













