இந்தியாவில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை கொடூரமாக கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் பெங்களூரை சேர்ந்தவர் ஜகதீஷ் (45). இவர் மனைவி சவுமியா (25). ஜகதீஷை விட சவுமியா அதிக வயது குறைவானவர் என்ற நிலையில் சமீபகாலமாக மனைவி நடத்தையின் மீது ஜகதீஷுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து யாருடனாவது தொடர்பு வைத்துள்ளாயா என கூறி சவுமியாவுடன் ஜகதீஷ் அடிக்கடி சண்டை போட்டு வந்தார்.
இதே போல நேற்றும் இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் சவுமியாவின் தலையை தரையில் வேகமாக மோதிய ஜகதீஷ் பின்னர் அவர் கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொலை செய்தார்.
பின்னர் நேராக காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்த ஜகதீஷ் நடந்த அனைத்தையும் வாக்குமூலமாக அளித்துள்ளார்.
இதையடுத்து பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.