13000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் நாய் செய்த செயலால் பரபரப்பு : அவசரமாக தரையிறக்கம்!!

528

 

ரஷ்ய விமானம் ஒன்றில் ஏற்றப்பட்ட நாய் அதன் கூண்டிலிருந்து வெளியே வந்து கதவை திறக்க முயன்றதால் விமானம் அவசரமாக தரையிறக்கபட்டது.

St. Petersburgலிருந்து கிளம்பிய Boeing 737 ரக விமானம் 13000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

அப்போது பொருட்கள் வைக்கும் அறையில் நாய் ஒன்று கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.

கூண்டின் கதவு சரியாக பூட்டப்படாத நிலையில் அதிலிருந்து வெளியேறிய நாய் கதவை திறக்க முயன்றுள்ளது.

இதையடுத்து அவசர அலாரம் சத்தம் கேட்க தொடங்கியது. அதே சமயத்தில் விமானத்தின் பாதுகாப்பு மின்னணுவியல் நாயை கதவை திறக்க விடாமல் தடுத்துள்ளது.

இதன் காரணமாக நாயின் உயிர் காப்பாற்றப்பட்டது. ஆனாலும் பாதுகாப்பு கருதி விமானமானது அவசரமாக மாஸ்கோவில் தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய விதிமுறைகளின்படி விமானத்தில் 8 கிலோ எடை வரையிலான மிருங்களை மட்டும் ஏற்றி செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.