ஒரு கணவன்.. 2 காதலர்களால் நடந்த கொலை சம்பவம்: இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம்!!

356

சென்னையில் கள்ளக்காதலனை கொலை செய்த பெண் அது குறித்து பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

மதுரவாயலை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் மனைவி நளினி. கடந்த 15-ஆம் திகதி ராஜேஷ், அவரின் நண்பர் குமரேசனுடன் மதுஅருந்திய நிலையில் காலையில் இறந்து கிடந்தார்.

கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நளினி பொலிசில் புகாரளித்த நிலையில், பொலிசார் நடத்திய விசாரணையில் ராஜேஷ் கொல்லப்பட்டது தெரியவந்தது.

குமரேசனே ராஜேஷுக்கு மதுவில் சயனைடு கலந்து கொடுத்து கொன்றது தெரியவந்தது.  ராஜேஷுக்கும் அந்தப்பகுதியைச் சேர்ந்த பத்மாவதிக்கும் பழக்கம் இருந்துள்ளது. பத்மாவதி திருமணமானவர்.

இந்நிலையில் குமரேசனுக்கும் பத்மாவதியுடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து ராஜேஷுடனான தொடர்பை பத்மாவதி விட்டுள்ளார்.

இதற்கு ராஜேஷ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குமரேசனுடன் சேர்ந்து ராஜேஷை பத்மாவதி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து பொலிசார் பத்மாவதியை கைது செய்தார்கள்.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்புதான் ராஜேஷை சந்தித்தேன். அதன்பிறகு நாங்கள் பழகினோம். அவருடன் குமரேசன் அடிக்கடி வீட்டுக்குவருவார். குமரேசனுடன் நான் பழகியது ராஜேஷுக்குப் பிடிக்கவில்லை. மேலும் ராஜேஷ், எனக்கு பல வகையில் தொல்லை கொடுத்தார்.

இதனால்தான் நெல்லூரிலிருந்து கொண்டு வந்த சயனைடு மூலம் ராஜேஷை குமரேசன் மூலம் கொலை செய்யத் திட்டமிட்டேன். மதுவால் ராஜேஷ் இறந்துவிட்டதாக அவரின் குடும்பம் நம்பியது.

ஆனால், பொலிசார் துப்பு துலக்கி எங்களைக் கண்டுப்பிடித்துவிட்டார்கள் என கூறியுள்ளார்.