திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் : பெண்ணை பழிவாங்க இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்!!

332

இந்தியாவில் திருமணம் செய்து கொள்ள பெண் மறுத்ததால் ஆத்திரத்தில், அவரிடம் வெடிகுண்டு இருப்பதாக புரளியை கிளப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையை சேர்ந்தவர் ஹதிம்பாய் ஷயிவாலா (28). இவர் ஓன்லைன் திருமண தகவல் மையம் மூலம் ஏமனை சேர்ந்த 26 வயது பெண்ணுடன் நட்பாகியுள்ளார். பெண்ணிடம் தான் வசதியானவன் என ஷயிவாலா கூறியுள்ளார்.

இதையடுத்து மும்பையில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை பார்க்க ஏமனிலிருந்து வந்த அப்பெண், ஷயிவாலாவை சந்தித்துள்ளார்.

அப்போது தான் ஷியிவாலா வசதியானவர் இல்லை எனவும், கடையில் வேலை செய்பவர் எனவும் பெண்ணுக்கு தெரியவந்தது.

இதையடுத்து ஷியிவாலாவை மணக்கமுடியாது என கூறி ஏமனுக்கு திரும்ப அப்பெண் தயாரானார்.

ஆனால் அவர் தன்னை திருமணம் செய்ய வேண்டும் என மிரட்டிய ஷயிவாலா, அப்படி செய்யவில்லையெனில் பழிவாங்குவேன் என கூறியுள்ளார்.

இதையடுத்து பெண் ஏமனுக்கு செல்லும் விமானம் நிற்கும் மும்பையின் சத்ரபதி சிவாஜி விமான நிலையத்துக்கு போன் செய்த ஷயிவாலா, குறித்த பெண்ணிடம் வெடிகுண்டு இருப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து விமான நிலையத்துக்கு வந்த பெண்ணை அதிகாரிகள் சோதனை செய்த போது அது பொய் என தெரிந்தது.

அதிகாரிகளுக்கு போன் வந்த நம்பரை வைத்து அது ஷயிவாலா நம்பர் என்பதை அப்பெண் உறுதி செய்ததோடு, தன்னை தொடர்ந்து அவர் மிரட்டியதையும் கூறினார்.

இதையடுத்து உடனடியாக ஷயிவாலா வீட்டுக்கு சென்ற பொலிசார் அவரை கைது செய்தனர். அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.