என்னை சீரழித்தது இவர்கள் தான் : அடையாளம் காட்டிய இளம்பெண்!!

317

தமிழகத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட ரஷ்ய பெண் குற்றவாளிகளை அடையாளம் காட்டியுள்ளார்.

திருவண்ணாமலையில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த ரஷ்ய பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பில் வழக்குபதிவு செய்த திருவண்ணாமலை பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் பாரதி, அவரது அண்ணன் நீலகண்டன், மணிகண்டன் மற்றும் வெங்கடேசன் என்ற நால்வரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஷ்ய பெண் கடந்த 20ம் திகதி டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார்.

தற்போது ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள ரஷ்ய பெண் முன்பு குற்றவாளிகளை அடையாளம் காட்டும் அணிவகுப்பு நடந்தது.

ஆரணி மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நடந்த இந்த அணிவகுப்பில், குற்றவாளிகளை ரஷ்ய பெண் அடையாளம் காட்டியுள்ளார்.

இந்நிலையில் ரஷ்ய பெண்ணை பார்ப்பதற்காக அவரது தாய் தமிழகம் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.