7 வருட காதல் : 3 முறை கருக்கலைப்பு : சாதியால் தொலைந்துபோன வாழ்க்கையை தேடி அலையும் பெண்!!

577

ஈரோடு மாவட்டத்தில் 7 வருடம் காதலித்த நபர் தனக்கு தாலிகட்டிய நிலையில், தற்போது தன்னை வெறுத்து ஒதுக்குவதால் அவருடன் தன்னை சேர்த்து வைக்க கோரி போராடி வருகிறார் ஷீலா.

தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஷீலா என்பவர் தனது கல்லூரி காதலன் கவின் என்பவரை கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

2017 ஏப்ரல் 10ம் தேதியன்று ஷீலாவும், கவின்குமாரும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் அவரவர் வீட்டில் தனித்தனியாக வாழ தொடங்கினர்.

கவின்குமாரின் பெற்றோருக்குத்தான் ரகசிய திருமணம் நடந்த சங்கதி தெரியவந்தது. இந்த திருமணத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவேயில்லை. அதற்கு முக்கிய காரணம், ஷீலா தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதுதான்.

இந்நிலையில், கவின்குமார் தற்போது ஷீலாவை வெறுத்து ஒதுக்கியுள்ளார். அவரது பெற்றோர் அவரின் மனதை மாற்றிவிட்டதாக ஷீலா கண்ணீர் வடிக்கிறார்.

எப்படியாவது தன்னை கணவருடன் இணைத்து வைக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஷீலா.