வவுனியாவில் கட்டாக்காலி கால்நடைகளினால் போக்குவரத்திற்கு இடையூறு!!

570

வவுனியா நகரப்பகுதிகள் மற்றும் மன்னார் வீதிகளில் கட்டாக்காலி மாடுகளால் மக்கள் போக்குவரத்தை மேற்கொள்வதில் பெரும் சிரமத்தினை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

குறிப்பாக இரவு நேரங்களில் வீதிகளில் நடுவே போக்குவரத்தை மேற்கொள்ளும் போது நடுவீதிகளில் கால்நடைகள் நிற்பதனால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு கடந்த காலங்களில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே கட்டாக்காலி மாடுகளை பிடித்து போக்குவரத்தை இடையூறுகள் இன்றி மேற்கொள்வதற்கு உதவி செய்யுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.