கனடாவில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மனநிலை சரியில்லாதவர்!!

868

கனடாவின் டொரண்டோவில் துப்பாக்கி சூடு நடத்திய இளைஞர் மனநிலை சரியில்லாதவர் என அவர் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

நகரின் கிரீக்டெளன் பகுதியில் நடைபாதை வழியாக வந்து கொண்டிருந்த பைசல் ஹூசன் என்ற நபர் அந்த பகுதியில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

இந்த துப்பாக்கி சூட்டில் 18 வயதான இளம்பெண்ணும், 10 வயதான சிறுமியும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடந்த பகுதிக்கு பொலிசார் உடனடியாக வந்த நிலையில் ஹூசனை சுற்றி வளைத்து சுட்டதில் அவர் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் ஹூசனுக்கு மனநலம் சரியில்லை என அவர் குடும்பத்தார் செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்துள்ளனர்.