அந்த 11 பேர் தான் காரணம் : தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் உருக்கமான கடிதம்!!

322

இந்தியாவில் கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் விஜய். இவர் மனைவி சிம்பி (30).
சிம்பியை விஜய், அவரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தார் 11 பேர் சேர்ந்து வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து சிம்பி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தின் மாடிக்கு சென்ற சிம்பி அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து சிம்பியிடமிருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றினார்கள். அதில், தனது கணவர் குடும்பத்தார் தனக்கு செய்த கொடுமைகளை எழுதியிருந்த சிம்பி, தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என எழுதியிருந்தார்.

இந்நிலையில் சிம்பியின் கணவர் மற்றும் குடும்பத்தாரை கைது செய்தால் சிம்பியின் சடலத்தை வாங்குவோம் என அவர் குடும்பத்தார் போராட்டம் நடத்தினார்கள்.

இதையடுத்து 11 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.