வவுனியா மாவட்ட செயலகத்தில் வடிகால் அமைப்பு சீரின்மை காரணமாக கடந்த காலங்களில் பெய்த கடும் மழை காரணமாக பல அலுவலகங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியிருந்தன.
இந்நிலையில் வடிகால்களை சீராக்குமாறு அலுவலகத்தினர் கோரியதையடுத்து மாவட்ட செலயகத்தினால் தற்போது சீரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் தற்போது மாவட்ட செயலகத்தில் வடிகால்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றதைக்காணக்கூடியதாக உள்ளது.
சகல திணைக்களங்களுக்கும் முன்பாக வடிகால்கள் அகலமாக்கப்படுவதுடன் மழை வெள்ளம் வடிந்தோடுவதற்கான அமைப்புக்களை ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து பருவமழைக்கு முன்னர் சகல வடிகால் சீராக்கும் அமைக்கும் பணிகள் நிறைவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






