வவுனியாவில் பாடசாலை மாணவிகளுக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் உதவி!!

668

வவுனியா கள்ளிக்குளம் மகாவித்தியாலயத்தில் க.பொ.த சாதாரணதரத்தில் கல்வி கற்றுவரும் கஸ்டப்பிரதேச பாடசாலை மாணவிகள் க.பொ.த. சாதாரணதரப்பரீட்சை மாதிரி வினாத்தாள்கள் வழங்குமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனினால் பரீட்சை மாதிரி வினாப்புத்தகம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

மாமடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள ஒரே ஒரு தமிழ்பாடசாலையான கள்ளிக்குளம் மகாவித்தியாலயத்திற்கு வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் பாடசாலை மாணவிகளிடம் நேற்று வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிதி அனுசரணையில் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ்.சுஜன், மற்றும் செயலாளர், பொருளாலர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.