பிரித்தானிய நதியில் அனாதையாக கிடந்த £50,000 பவுண்ட் மதிப்புள்ள தங்கக்கட்டி!!

569

Scotland பகுதியில் ஓடும் நதி ஒன்றின் பாறை இடுக்குகளில் இருந்து £50,000 பவுண்ட் மதிப்புள்ள தங்கக்கட்டி கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Scotland பகுதியில் ஓடும் நதி ஒன்றில் இருந்து Douglas (40) என்பவர் தங்கக்கட்டி ஒன்றினை கண்டெடுத்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தங்கக்கட்டியினை கண்டெடுத்த இவர், அது குறித்த ரகசியத்தினை வெளியிடாமல் நீண்ட காலம் மௌனம் காத்து வந்த நிலையில் தற்போது மனம் திறந்துள்ளார்.

இதுகுறித்த அவர் கூறுகையில், ஒரு நாள் ஆற்றில் முகத்தை புதைத்தவாறு படுத்திருந்தபொழுது, பாறையில் ஏற்பட்டிருந்த விரிசலை பின்தொடர்ந்தேன். அப்பொழுது அங்கிருந்த பாறைப்படுக்கைக்கு கீழே 2 கிராம் மதிப்புள்ள தங்கக்கட்டியை பார்த்து ஆச்சர்யமடைந்தேன். பின்னர் என்னுடைய நபரை அழைத்தபோது, அவர் பார்த்து விட்டு 5 முதல் 7 கிராம் வரை இருக்கும் என கூறினார்.

எங்களுக்கு இது மிகவும் வியப்பாகவே இருந்தது. இதற்கு முன்பு இது போன்ற ஒன்றினை நாங்கள் பார்த்ததே இல்லை என கூறினார்.

தற்போது வல்லுநர்கள் பலரும் அப்பகுதியில் இன்னும் நிறைய தங்கங்கள் இருக்க வாய்ப்புள்ளதாக தேடி வருகின்றனர். ஆனால் அதற்கான சரியான இடத்தினை இன்னும் கண்டறிய முடியாததால் வேட்டை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முன்னதாக இதனை ஆய்வு செய்த தங்க நிபுணர் Leon Kirk, தங்கக்கட்டி குறைந்தபட்சம் £50,000 பவுண்ட் மதிப்பு இருக்கும் எனவும் விரைவில் பிரித்தானிய அருங்காட்சியத்திற்காக வாங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 1808ம் ஆண்டு Cornwall பகுதியில் கண்டறியப்பட்ட 59 கிராம் தங்கக்கட்டியே பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கக்கட்டிகளில் மிகவும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.