மெக்சிகோ கோவிலில் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்ட்ட குழந்தையின் வன்கூடு கண்டுபிடிப்பு!!

570

மெக்சிகோவில் அகழ்வுப் பணிகளில் ஈடுபடுவோர் குழந்தையின் வன்கூடு ஒன்றைக் கண்டெடுத்துள்ளனர். இது Aztec கோவிலின் சூரிய மற்றும் போர்க் கடவுளான Huitzilopochtli இற்கு அர்ப்பணிக்கப்பட்டதென தெரியவருகிறது.

இந்தக் குழந்தையானது மெக்ஸிக்கோ நகரின் தரையில் மி ஆழமாக புதைக்கப்பட்டிருந்தது. அது அவ் வட்டக் குழியில் பூசகர்களால் புதைக்கப்பட்ட வேளை அதன் வயது 5 – 10 வருடங்கள் இருந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

அக் குழந்தை எவ்வாறு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது இதுவரை தெளிவாகவில்லை. எனினும் அது போர்க் கடவுளைப் போன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அதனது கணுக்கால் மற்றும் கழுத்துப் பகுதியில் மணிகள் அணிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மரத்தாலான மார்புக் கவசமும் அணிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரம் ஆய்வாளர்கள் பறவையின் சிறகொன்றையும் கண்டுபிடித்துள்ளனர், இது Huitzilopochtli கடவுளுடன் தொடர்புடையதாகவுள்ளது.

அக்காலத்தில் போர்க் கடவுளை திருப்திப்படுத்துவதற்காக மனிதர்களின் இதயத்தை எடுத்துவிட்டு உடலை ஆழமாக புதைக்கும் வழக்கம் இருந்துவந்தது. அவ் இதயம் போரில் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள், அடிமைகளுக்கு சொந்தமானது என்ற கருத்தில் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இதற்கு முன்னரும் இது போன்ற உடல்பகுதிகள் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருந்தது, குறிப்பாக 2005 இல் 5 வருட வயதுடைய ஆணின் உடல் மீட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.