வையாபுரியின் சோககீதம்..!

298

vaiyaகாமெடி நடிகர் வையாபுரி தற்போது வாய்ப்புகள் எதுவும் இன்றி வீட்டில் இருக்கிறார். இந்த நிலையில் ஒரு படத்தின் ஆடியோ ரிலீசுக்கு வந்தவர் தன் மனக்குமுறலை கொட்டிவிட்டார்.

அவர் பேசியதாவது: நாலு பேரை சிரிக்க வைச்சு நல்ல பேர் வாங்கினேன். இப்போ வீட்ல சும்மா உட்கார்ந்திருக்கேன். இப்போ காமெடி படங்கள் நிறைய வருது. ஆனா என்ன மாதிரி காமெடியன்கள் வேலை இல்லாம வேதனையில இருக்கோம்.

நானும் பேப்பர்ல விளம்பரத்தை பார்த்துட்டு எல்லா கம்பெனிக்கும் போன் பண்ணி சான்ஸ் கேக்குறேன். கம்பெனி கம்பெனியா நேர்ல போயி கேக்குறான். யாரும் சான்ஸ் தரமாட்டேங்குறாங்க.

எங்கிருந்தெல்லாமோ நடிகர் நடிகைகளை அழைச்சிட்டு வந்து நடிக்க வைக்கிறாங்க. எங்களுக்கு வேற மொழியில யாரும் வாய்ப்பு தந்ததில்லை. கமலஹாசனுக்கு ஒரு பிரச்னை வந்தபோது நான் இந்த நாட்டை விட்டு போவேன்னு சொன்னார். எங்களுக்கு பிரச்னை வந்தா எங்கே போறது இந்த உலகத்தை விட்டே போகவேண்டியதுதான்.

இவ்வாறு உருக்கமா வையாபுரி பேசினார்.