வவுனியா – கொழும்பு கடுகதி புகையிரதம் பிரேக் இறுகியதால் ஒரு மணி நேரம் தாமதமாகி புறப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று காலை 5.45 மணியளவில் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாரான கடுகதி புகையிரதத்தின் பிரேக்கே இறுகியுள்ளது.
இதனால் அதனை சீர் செய்து புகையிரதம் புறப்பட்டதால் ஒரு மணி நேரம் காலதாமதம் ஏற்பட்ட நிலையில் பயணிகள் அசௌகரியங்களை எதிர் நோக்கியிருந்தனர்.








