வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு முன்பாக இன்று (27.07.2018) காலை 10 மணியளவில் தண்ணீர் தாக சேவை இடம்பெற்றது.
வவுனியா பொது வைத்தியசாலையில் சதகம் சுப பௌத்த சங்கத்தினால் 8வது தடவையாக இத் தண்ணீர் தாக சேவை இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியசாலையின் ஊழியர்கள் கலந்து கொண்டு பொதுமக்கள், வாகன சாரதிகளுக்கு குளிர்பாணம், பிஸ்கட் வழங்கினார்கள்.













