லண்டனில் தனது நண்பன் துடிதுடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கையில் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்த பெண்ணின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது.
2016 டிசம்பர் மாதம் 1 ஆம் திகதியன்று லண்டனின் நார்த் ஏக்டன் பகுதியில், பாத்திமாவின் ஆண் நண்பர் காலீத் சபியை, மற்றொரு ஆண் நண்பர் ரஜா கான் கத்தியால் தாக்கியுள்ளார்.
காலீத்தின் தலையில் பலமுறை தாக்கிய பிறகு, கத்தியால் மார்பில் குத்தியதும் அவர் கீழே விழுந்து இறந்துள்ளார்.
ரத்தம் வெளியேற, கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட்டுக் கொண்டிருந்த காலீத்துக்கு உதவி செய்யாமல், அவரது நிலையை வீடியோ படமெடுத்தார் பாத்திமா. பிறகு அதை ஸ்னாப் சாட் (Snapchat) என்ற சமூக ஊடகத்தில் பதிவேற்றினார் பாத்திமா.
காலீத் இறந்த சில மணி நேரத்தில் ஸ்னாப் சாட்டில் வீடியோவை பதிவேற்றிய பாத்திமா, ‘என்னுடன் மோதினால் இப்படித்தான் நடக்கும்’ என்று எழுதியிருந்தார்.
இதுகுறித்து பாத்திமா மற்றும் குத்திகொலை செய்த பாத்திமாவின் நண்பன் ரஜா கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காலீத்க்கு உதவி செய்ய தாங்கள் முயன்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் சிலர் தெரிவித்தனர்.
மேலும், இந்த வீடியோ காட்சியை பதிவிட்ட ஒரு மணிநேரத்தில் பாத்திமா நீக்கியதும் சாட்சியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
காலீத்துக்கு முன்பே பாத்திமாவின் ஆண் நண்பராக இருந்தவர் ரஜா கான். அவர் ஸ்னாப்சாட்டில் பாத்திமாவை பின் தொடர்ந்தார். காலீத்தும், ரஜா கானும், பாத்திமாவுடன் பழகுவது தொடர்பாக சண்டையிட்டுக் கொண்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
காலீத் ச பியின் கொலைக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பாத்திமா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார், காலீத் இறக்கும்போது அதை காணொளியாகப் பதிவு செய்ததற்காக வெட்கப்படுவதாக அவர் தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்.
பாத்திமாவின் தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், அவரது செயல் கொலையாளியின் செயலுக்கு சற்றும் குறைந்ததல்ல என்று தெரிவித்துள்ளது





