நாட்டு மருந்து சாப்பிட்டதால் நன்றாக இருந்த முகம் விகாரமாக மாறிபோன பரிதாபம் : வைரலாகும் புகைப்படம்!!

830

தமிழகத்தில் நாட்டு மருந்து சாப்பிட்டதால், நபர் ஒருவரின் முகம் விகாரமாக மாறியதால், அவர் தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள கருங்காலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் சில மாதங்களுக்கு முன்பு கழிவறையில் தவறி விழுந்துள்ளார்.

இதன் காரணமாக அவருக்கு கிட்னியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இது தொடர்பாக சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று இருந்த போது, இதற்கு சிகிச்சை அளிக்கும் விளம்பரம் ஒன்றை பார்த்த இவர் அவர்களிடம் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட நாட்டு மருந்துகளை ராமமூர்த்தி சாப்பிட்டு வந்ததால், அவரின் முகம் விகாரமாக மாறிப் போயுள்ளது.

இதனால் அவர் தனக்கு உதவுமாறு கோரி அவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். மேலும் விளம்பரத்தை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இவர் தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.