வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் சென்ற புலனாய்வுப்பிவினர் தாண்டிக்குளம் பகுதியில் வைத்து கஞ்சாவுடன் நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று பிற்பகல் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செய்ற்படும் புலனாய்வுப் பிரிவினருக்குக்கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு முன்பாக நின்ற யாழ்ப்பாணம் கைதடிப்பகுதியைச் சேர்ந்த 37வயது நபர் ஒருவரின் பயணப் பொதியிலிருந்து 1கிலோ 652கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளனர்.
இதையடுத்து குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.





