வவுனியா கள்ளிக்குளத்தில் குப்பை கொட்டுவதற்கு வடமாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கம் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களினால் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுகள், கடந்த 50 வருடங்களாக பம்மைபடுப்பகுதியில் இதற்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் கொட்டப்பட்டு வருவதாக நம்பப்படுகின்றது.
எனினும் நேற்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் குப்பைகளை கள்ளிக்குளம் பகுதியில் கொட்டுவதற்கு மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.
இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ள வடமாகாண சபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடித்தில் ஒன்றினை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மேற்படி பிரதேசத்திற்கு கடந்த 2013, 2014ஆம் அண்டுகளில் புதிதாக மக்கள் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் குப்பைகள் கொட்டும் இடமாக மாற்றும் விடயங்கள் பற்றி பேசப்பட்டு வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக நேற்று 01.08.2018 மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விஷே கூட்டத்தில் குப்பைகள் கொட்டும் இடத்தை ஓமந்தை – கள்ளிக்குளம் பகுதிக்கு மாற்றுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.
கள்ளிக்குளம் வவுனியாவின் பூர்வீகக்கிராமமாகும் 1977, 1983, 1990 காலப்பகுதிகளில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இக்கிராமத்திலிருந்து மக்கள் வெளியேறி தற்போது மீண்டும் மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இக்கிராமத்தை குப்பைகள் கொட்டும் இடமாக மாற்றும் முயற்சியானது எற்றுக்கொள்ள முடியாது ஏன்பதை தங்களின் கவனத்திற்குத் தெரியப்படுத்தவதாக வடமாகாணசபை உறுப்பினர் ப. சத்தியலிங்கத்தினால் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





