காதல் விவகாரத்தில் 35 வயது பெண்ணை கொலை செய்த 15 வயது சிறுவன்!!

285

சென்னையில் 35 வயது பெண் கொலையில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைந்தகரை பகுதியை சேர்ந்த சங்கரசுப்பு – தமிழ்செல்வி தம்பதியினருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்த தம்பதியினர் வீட்டின் அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த 2 ஆம் திகதி தமிழ்செல்வி தனது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

கழுத்து நெறிக்கப்பட்டும், கை மணிக்கட்டு நரம்பு அறுக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக அங்குள்ள சிசிடிவி கமெராக்களை பொலிசார் ஆய்வு செய்த போது, தமிழ்செல்வியின் உறவுக்கார 15 வயது சிறுவனை பொலிசார் கைது செய்தனர்.

தமிழ்செல்வியின் மகளை இந்த சிறுவன் காதலித்து வந்ததாகவும், இதனை கண்டித்த காரணத்தால் ஆத்திரமடைந்த சிறுவன் தமிழ்செல்வியை கொலை செய்திருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.