30 நிமிடங்கள் குழந்தையின் கண்முன்னே துடிதுடித்து இறந்துபோன தாய் : சோக சம்பவம்!!

254

வேலூர் மாவட்டத்தில் சுமார் 30 நிடங்கள் 2 வயது குழந்தை முன்பு தாய் துடி துடித்து இறந்துபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இராமலிங்கம் – தரணி தம்பதியினர் தங்களது இரண்டு வயது பெண் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

சித்தூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெட்ரோல் பங்கில் வண்டிக்கு பெட்ரோல் நிரப்ப வந்துள்ளார். அதே பெட்ரோல் பங்கில் டீசல் போட கனரக லோடு லாரி திரும்பும்போது தரணி வந்த இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியது.

மோதியபோது தரணி கீழே விழுந்து லாரியின் டயரில் சிக்கிக்கொண்டார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு கூட்டம் கூடியது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சர்விஸ்க்கும், போக்குவரத்து காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துவிட்டு தரணியை டயருக்கு அடியில் இருந்து மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர். அவரை மீட்க முடியாமல் தவித்தனர்.

சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் பொலிசார் வர கால தாமதமானது. இதனால் சுமார் அரை மணி நேரம் துடிதுடித்தார். பொதுமக்கள் போராடியும் தரணியை காப்பாற்ற இயலவில்லை.

கணவன் மற்றும் குழந்தை கண் முன்னே லாரி மோதி தாய் துடிதுடித்து இறந்த சம்பவம் அவர்களை மட்டும்மல்ல பொதுமக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

தரணி இறந்தபின்பே காட்பாடி பொலிசார் சம்பவயிடத்துக்கு வந்துள்ளனர். வந்தவர்கள் இறந்த தரணியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.