வவுனியா மன்னார் வீதியில் பயணிகளின் உயிருடன் விளையாடிய தனியார் – இ.போ.ச பேரூந்துகள்!!

599

வவுனியா மன்னார் பிரதான வீதி வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு முன்பாக இன்று (06.08.2018) மாலை 5.15 மணியளவில் இ.போ.ச மற்றும் தனியார் பேரூந்தின் போட்டித்தன்மை காரணமாக பயணிகள் சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர்.

திருகோணமலையிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்தும் வவுனியாவிருந்து செட்டிக்குளம் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து வவுனியா மன்னார் பிரதான வீதியில் பட்டானிச்சூர் பகுதியிலிருந்து வேப்பங்குளம் 6ம் ஒழுங்கை வரை போட்டி போட்டுக்கொண்டு வீதியில் சமமாக சென்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையடியில் வைத்து குறித்த தனியார் – இ.போ.ச பேரூந்து சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டு தண்டப்பத்திரம் வழங்கியுள்ளனர்.

இவ்வாறான இ.போ.ச மற்றும் தனியார் பேரூந்துகளின் போட்டித்தன்மை காரணமாக பொதுமக்கள் தினசரி அச்சத்தில் வீதியில் பயணிக்கின்றனர்.