வவுனியாவில் திருட்டு நகையுடன் ஒருவர் கைது!!

582

வவுனியா மெனிக்பாம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை 5பவுண் திருட்டு நகையுடன் வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியாவில் இடம்பெற்ற பல திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புபட்டு சிறைவாசம் அனுபவித்து வந்த மெனிக்பாம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் தகவல் வவுனியா குற்றத்தடுப்புப்பிரிவினருக்குக்கிடைத்துள்ளது.

இதையடுத்து குற்றத்தடுப்பு பொலிஸ் பரிசோதகர் சமிந்த சோமஜித் வழிநடத்தலில் உத்தியோகத்தர் நிஜாமின் தலைமையில் சென்ற குற்றப்பிரிவினர் நேற்று வவுனியா மெனிக்பாம் பகுதியில் வசித்துவந்த 30 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை 5 பவுண் திருட்டு நகையுடன் செய்துள்ளனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது பண்டாரிக்குளம், இராசசேந்திரன்குளம், தவசிகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிலில் சென்று தனிமையில் செல்லும் பெண்களிடம் சங்கிலி அறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரிடம் கைப்பற்றப்பட்ட 5பவுண் பெறுமதியான தங்க நகைகள் உட்பட சந்தேக நபரை விசாரணைகனின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.