பெப்ரவரி 15ம் திகதி துவங்கும் அஜீத் – கௌதம் மேனன் படம்..!

265

ajithஅஜீத் குமாரை வைத்து கௌதம் மேனன் எடுக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதி துவங்குகிறது.

கௌதம் மேனன் அஜீத் குமாரை வைத்து படம் எடுக்கப் போவதாக அறிவித்தார். அந்த படப்பிடிப்பு எப்பொழுது துவங்கும் என்று அஜீத் ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.

இந்நிலையில் கௌதம் சிம்புவை வைத்து தான் இயக்குவதாக அறிவித்த படத்தின் படப்பிடிப்பை துவங்கினார். சிம்பு படம் விண்ணைத் தாண்டி வருவாயாவின் இரண்டாம் பாகம் அல்ல என்று அவர் அறிவித்தார்.

இந்நிலையில் அஜீத்தை தான் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதி துவங்குகிறது என்று கௌதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அஜீத், தமன்னா நடிக்கும் வீரம் படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. அதனால் அஜீத் அந்த படத்தின் வேலைகளில் தற்போது பிசியாக உள்ளார்.