வவுனியாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு!!

975

வவுனியா, பசார் வீதியிலுள்ள விடுதியொன்றிலிருந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். வேலணை பகுதியினை சேர்ந்த வேலன் கந்தசாமி (71 வயது) என்ற வயோதிபரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

விடுதி ஊழியரொருவரே குறித்த நபரின் சடலத்தை அவதானித்து வவுனியா பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.