மோசமான ஆண்களால் இரண்டு மாதங்கள் நான் அனுபவித்த நரக வேதனைகள் : ஒரு சிறுமியின் கண்ணீர் வாக்குமூலம்!!

707

மொராக்கோ நாட்டில் 17 வயது சிறுமி ஒருவர் இரண்டு மாதங்களாக தான் அனுபவித்த நரக வேதனை குளித்து கண்ணீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Beni Melal பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுமி இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கையில், கத்தி முனையில் இரண்டு ஆண்களால் கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதைகளுக்கு ஆளாகியுள்ளார்.

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவர் வீடியோவில் வாக்குமூலமாக பதிவு செய்து அதனை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, என்னை கடத்திய மோசமான ஆண்கள் சில நாட்கள் போதை மருந்தினை கொடுத்து என்னை பாலியல் சித்ரவதை செய்தார்கள். அதன்பிறகு பணத்திற்காக என்னை வேறு ஒருவரிடம் விற்பனை செய்தார்கள்.

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆண்கள் என வீட்டுக்குள் அடைத்து வைத்து பாலியல் சித்ரவதைகள் செய்வார்கள், மேலும் எனக்கு சரியாக உணவு கொடுக்காமல் எனது உடலில் ஆங்காங்கே சிகரெட்டால் சூடுவைத்தார்கள் என கூறியுள்ளார்.

தற்போது, அவர்களிடம் இருந்து தப்பித்து வந்துள்ள நான், எனது உடலில் சூடுபட்ட இடங்களில் டாட்டூ போட்டு மறைத்துவைத்துள்ளேன் என கூறியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த 75,000 பேர் இவருக்கு ஆதரவு தெரிவித்து, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கையெழுத்திட்டதையடுத்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.