2028ம் ஆண்டளவில் சீனாவின் சனத்தொகையை விஞ்சப் போகும் இந்தியா..

401

population

2028ஆம் ஆண்டளவில் சீனாவை விஞ்சி உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என ஐநா வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

அந்த சமயத்தில் இந்தியா சீனா ஆகிய இரண்டு நாடுகளின் சனத்தொகையும் 145 கோடியாக இருக்கும் என்று அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

போகப்போக சீனாவின் சனத்தொகை மெதுவாக குறைந்துகொண்டு வரும் ஆனால் இந்தியாவின் சனத்தொகையானது 2050ஆம் ஆண்டுவரை அதிகரித்துக்கொண்டே போகும் என இந்த அறிக்கை கணித்துள்ளது.

தற்போது 700 கோடியாகவுள்ள உலகின் சனத்தொகை 2050ஆம் ஆண்டளவில் 940 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் பெரும்பான்மையான சனத்தொகை அதிகரிப்புக்கு வளர்ந்துவரும் நாடுகளே காரணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே கணிக்கப்பட்ட சனத்தொகை அதிகரிப்புகளை அதிகமான பெருக்கம் ஏற்படும் என்று தற்போது கணிக்கப்படுகிறது.