300 ஆண்டுகளுக்கு முன்பு பேய் எழுதிய கடிதத்தில் என்ன இருந்தது தெரியுமா? நீங்கிய மர்மம்!!

369

இத்தாலியில் பெண் கன்னியாஸ்திரி ஒருவர் பேய் சொன்னதாக கூறி, கடிதம் ஒன்றை எழுதியிருந்த நிலையில், அதன் அர்த்தம் தற்போது தெரியவந்துள்ளது.

இத்தாலியின் Sicily பகுதியில் இருக்கும் Palma di Montechiaro பகுதியில் கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்னர் பெண் கன்னியாஸ்திரியான Maria Crocifissa della Concezione பேய் சொன்னதாக கூறி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அந்த கடிதம் இன்றளவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் அதில் அப்படி என்ன தான் எழுதியிருக்கிறது என்பதை அறிய தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அதன் பயனான இத்தாலியின் Ludum science centre அந்த கடித்தத்தில் என்ன எழுதியிருக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளது.

அதாவது Maria Crocifissa della Concezione என்ற பெண் கன்னியாஸ்திரி அங்கிருக்கும் தேவாலயத்தில் 15 வயது முதல் பணியாற்றி வந்துள்ளார்.

அப்போது ஒரு நாள் காலை எழுந்து பார்க்கையில் தன் உடல் முழுவதும் மைகள் இருந்துள்ளன. இரவு முழுவதும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன் என்பதை உணர்ந்துள்ளார்.

அந்த கடிதத்தை பேய் தான் எழுத வைத்துள்ளது என்று நம்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் கடவுள், பரிசுத்தமான ஆவிகள் போன்றவை பற்றி எழுதப்பட்டுள்ளது. கடவுள் என்ற ஒன்று மனிதனால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து டேனியல் என்ற அந்த ஆராய்ச்சி மையத்தின் நபர் கூறுகையில், என்னைப் பொறுத்த வரை இது பேய் எழுத சொன்னது போன்று தெரியவில்லை.

அந்த பெண் கன்னியாஸ்திரிக்கு schizophrenia பிரச்சனை இருந்திருக்கும், அவருக்கு பல மொழிகள் தெரிந்திருக்கும். இதனால் அவர் அனைத்து மொழிகளையும் ஒன்றாக ஏதோ ஒன்றை எழுதி, அது பேய் எழுத வைத்ததாக கற்பனை செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.