மாரடைப்பால் உயிரிழந்தார் மணிவண்ணன் – அதிர்ச்சியில் திரை உலகம்

497

mani
பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் மாரடைப்பால் காலமானார். சென்னை நெசபாக்கத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட அவரது இல்லத்திலேயே உயிர் பிரிந்தது.

மணிவண்ணன் கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவர் 400க்கு மேல்திரைப்படங்களில் நடித்துள்ள தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரின் இயக்கத்தில் 45 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன.

மேலும் இவர் நடிகர் சத்தியராஜின் கல்லூரி நண்பர் ஆவார், நடிகர் சத்யராஜை வைத்து சுமார் 25 திரைப்படங்கள் எடுத்துள்ளார். மணிவண்ணன் சிறந்த இயக்குனர் மட்டுமின்றி மிகப்பெரிய நடிகராகவும் திகழ்ந்தவர்.

மேலும் ஈழ மக்களிற்காக தொடர்ந்து குரல்கொடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இறப்பு திரை உலகினருக்கு மட்டுமன்றி ஈழ மக்களுக்கும் பேரிழப்பாகும்..