இலங்கையில் ஏற்பட்ட பாரிய விபத்து : மனிதாபிமானத்தால் காப்பாற்றப்பட்ட ஐந்து உயிர்கள்!!

711

பதுளையில் ஏற்பட்ட பாரிய விபத்தின் போது, அந்தப் பகுதி மக்களின் துரித நடவடிக்கை காரணமாக ஐந்து பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

பதுளை பண்டாரவளை வீதியின் தேமோதரை 10வது மைல்கல் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். ஏரி ஒன்றுக்குள் மோட்டார் வாகனம் தடம் புரண்டமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்து நேற்று மாலை நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த பெண் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதேச மக்கள் இணைந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றி பதுளை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கொட்டும் மழையிலும் காயமடைந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டிருந்தனர்.

பிரதேச மக்கள் இணைந்து மேற்கொண்ட பாரிய போராட்டத்தின் ஊடாக அங்கு மனிதாபிமானம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஐந்து பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.