அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் முதலிடம் பிடித்த யாழ். மாணவர்கள்!!

515

நடைபெற்று முடிந்த 2018ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழில் இரு மாணவர்கள் தமிழ் மொழி மூலம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்கள்.

யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மற்றும் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள் 198 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இதில், யாழ். இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த மகேந்திரன் திகலோலிபவன் மற்றும், யாழ். சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை மாணவி நவஸ்கன் நதி ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர்

நடைபெற்று முடிந்த 2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் பிலியந்தலை, சேமவீர சந்திரசிறி வித்தியாலயத்தின் மாணவன் புமித் மெத்னுல் விதானகே மற்றும் வெயாங்காடை புனித மெரி மகா வித்தியாலயத்தின் குருகலசூரிய சனுப திமத் பெரேரா ஆகிய இருவரும் 199 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தை யாழ். மாவட்ட மாணவர்கள் இருவர் பெற்றுள்ளனர்.

யாழ். இந்து ஆரம்ப பாடசாலையின் மாணவன் மகேந்திரன் திகலோலிபவன் மற்றும் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையின் மாணவன் நவஸ்கன் நதி ஆகிய இருவரும் 198 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.