இலங்கை இளைஞனின் புதுமையான அபார கண்டுபிடிப்பு : வியப்பில் மக்கள்!!

1110

இலங்கையில் இளைஞனின் புதிய கண்டுபிடிப்பு தொடர்பில் நாட்டுக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வாகன தயாரிப்பு துறையில் ஆர்வம் கொண்டுள்ள இளைஞன், வித்தியசமான மோட்டார் வாகனம் ஒன்றை தயாரித்துள்ளார்.

அனுராதபுரத்தை சேர்ந்த 21 வயதான தினேஷ் ராஜபக்ச என்ற இளைஞனே வித்தியாசமான முறையில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார்.

மோட்டார் வாகனம் முன்னோக்கி பயணிக்கும் போது தடை ஏற்பட்டால், மீண்டும் பின் பக்கமாக திரும்பி தடை இன்றி பயணிக்க கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய கண்டுபிடிப்பான வாகனம் பயணித்து கொண்டிருக்கும் போது, கையடக்க தொலைபேசியில் கட்டுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மோட்டார் வாகனம் பயணிக்க முடியாத வகையில் ஆழமான பள்ளங்கள் காணப்பட்டால், தானாகவே நின்று பின்னால் நோக்கி பயணிப்பதே கண்டுபிடிப்பின் விசேட தன்மையாகும்.

தினேஷின் அபார கண்டுபிடிப்பினை மேம்படுத்த உதவிகளை தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு உதவும் பட்சத்தில் இலங்கையில் தனித்துவமான மோட்டார் வாகனம் தயாரிக்கும் அளவு திறமையானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞனின் தாயார் வெளிநாட்டில் வசிக்கின்ற நிலையில், தந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணியாற்றி வருகின்றார்.