வவுனியா பேரூந்து நிலையத்தின் நிலையை கருத்தில்கொண்டு உப நகரபிதாவின் செயற்பாடு!!

319

வவனியாவில் பல இடங்களில் வீதி மின்விளக்குகள் பொருத்தப்படாது காணப்படுகின்மை தொடர்பாக வவுனியா நகரசபையின் உப தலைவர் சு.குமாரசாமி உடன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

வவுனியாவில் பல வீதிகள் மற்றும் முக்கிய இடங்களில் வீதி மின்விளக்குகள் பொருத்தப்படாமலும் பொருத்திய மின்குமிள்கள் ஒளிராமலும் காணப்படுவது குறித்து சமூக ஆர்வலர்கள் வவுனியா நகரசபையின் உப தலைவர் சு.குமாரசாமிக்கு தெரியப்படுத்தியதை அடுத்து தன்னாலான உதவியை உடன் செய்து தருவதாக தெரியப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து விலையுயர்ந்த பிரகாசமான இரு வீதி மின்விளக்குகளை புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இருள் சூழ்ந்து காணப்படுவதனை கருத்தில் கொண்டு பொருத்தியதுடன் ஏனைய பல இடங்களிலும் பல்வேறு உதவிகளின் ஊடாக வீதி மின்குழிழ்களை பொருத்தியிருந்தார்.