யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் யுவதி ஒருவரை அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் செம்மணி பகுதியில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முச்சக்கரவண்டியில் வந்த சிலரே இந்த கடத்தலை நடத்தியுள்ளனர்.
குறித்த முச்சக்கரவண்டி யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்தி யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட வீதியூடாக சென்றுள்ளது.
மேலும், குறித்த முச்சக்கர வண்டியை துரத்திச் செல்லும் போது கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதியின் ஆடையை கழற்றி, துரத்திச் சென்ற ஒருவரின் முகத்தில் வீசி விட்டு சென்றுள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.








