குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து பாலியல் வன்கொடுமை : என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என தாய் கண்ணீர்!!

283

தமிழகத்தில் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து கொள்ளையர்கள் அந்த பெண்ணிடம் அத்து மீறி நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் மண்ணிவாக்கத்தைச் சேர்ந்தவர் மொயின். கடந்த 15-ஆம் திகதி இவர், இவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென்று உள்ளேஎ நுழைந்த கொள்ளையர்கள், அவரின் மனைவியிடம் அத்துமீறி நடந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த பெண் தமிழ் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். அதில் சம்பவ தினத்தன்று நான், கணவர், குழந்தைகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தோம்.

அப்போது திடீரென்று உள்ளே நுழைந்த நான்கு பேர், கணவனை கத்தியால், வெட்டிவிட்டு, அதன் பின் தன்னை ஓர் அறைக்குள் இழுத்துச் சென்றனர்.

அங்கு என்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றனர். நான் கடைசி வரை போராடினேன். இருப்பினும் என்னுடைய தொடை, மார்பு பகுதிகளில் பிளேடால் கிழித்து என்னை அரை நிர்வாணமாக்கினர்.

என்னுடைய அலறல் சத்தைக் கேட்டு, அருகிலிருந்த பாபு என்பவர் வீட்டினுள் வந்து சம்பவத்தைக் கண்டு, எங்களை காப்பாற்ற முயன்றார். அவரை அந்த நபர்கள் கத்தியால் வெட்டினர்.

அதன் பின் கணவர் மற்றும் அவரை முட்டி போட 20 நிமிடங்கள் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தனர். குழந்தைகளின் கழுத்தில் கத்தியிருந்ததால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மேலும் தகவல்கள் தெரிவிக்கையில், வீட்டுக்குள் நுழைந்த நான்கு பேரும் முதலில் செல்போன்களைப் பறித்துள்ளனர். பிறகு தாலியையும் வீட்டிலிருந்த 3,000 ரூபாயையும் கத்தியைக் காட்டி மிரட்டி பிடுங்கியுள்ளனர்.

அதன் பிறகுதான் மொய்தீனின் மனைவியிடம் தகாத முறையில் நடந்துள்ளனர். அதைத் தட்டிக்கேட்ட மொய்தீன், பாபு ஆகிய இரண்டு பேரையும் வெட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மொயினின் உறவினர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததால், அவர்கள் வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் தொல்லை குறித்து எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லை என்று பொலிசார் கூறியுள்ளார்.