வவுனியாவில் T56 துப்பாக்கி ரவையுடன் ஒருவர் கைது!!

316

வவுனியாவில் சின்னக்குளம், நேரியகுளம் பகுதியில் நேற்றைய தினம் (17.10) துப்பாக்கி ரவையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 10 மணியளவில் கஞ்சா வியாபாரம் செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சின்னக்குளம் நேரியகுளம் பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற செட்டிக்குளம் பொலிசார் வீட்டினை சோதனை செய்த போது கிணற்றின் அருகே இருந்து T56 துப்பாக்கி ரவைகள் 22 வைத்திருந்ததன் குற்றச்சாட்டில் 52 வயது நபரை கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் குறிப்பிடுகையில் தான் மீன் பிடிக்க குளத்திற்கு சென்ற போது குளக்கரையில் பொதி செய்யப்பட்ட நிலையில் ரவைகள் காணப்பட்டதாகவும், அதனை தான் எடுத்து வந்து வீட்டு கிணற்றருகே வைத்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.