நான்கு மணி நேரத்தில் 3560 பேர் கைது!!

555

நாடளாவிய ரீதியில் நான்கு மணி நேரத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3,560 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 6,020 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.