தாயை இழந்த பூனைக் குட்டிகளுக்கு தாயாக மாறிய நாய் : நெகிழ்ச்சியான தருணம்!!

548

தாய்ப்பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் நாயின் செயற்பாடு தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. பாணந்துறை கடற்கரையில் பூனைக் குட்டிகளை பாதுகாக்கும் நாயின் செயற்பாடு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த நாய் அண்மையில் குட்டிகளை போட்டுள்ளது. எனினும் அதன் குட்டிகள் அனைத்து உயிரிழந்துள்ளன.

இந்நிலையில் தாயினை இழந்த பூனைக் குட்டிகளுக்கு தாயப் பாசத்தை வெளிப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மனிதர்களை மிஞ்சியதாக நாயின் தாய்ப்பாசம் அமைந்துள்ள நிலையில், கடற்கரைக்கு வருவோரின் மனங்களையும் நெகிழச் செய்துள்ளது.